நாம் வலியுறுத்துவது
அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில்
இருந்து விடுதலையாகும்.
வெளிப்படுகின்ற பாசீசம் என்பது பலவகைப்படுகின்றது.
அரசபயங்காரவாதம்புலிகளின் பாசீசம் மற்றும் மாற்று இயக்கங்களின் மக்கள் வீரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாகும்.
இன்று சிறிலங்கா அரசின் பாசீச நடவடிக்கை என்பது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்பதாக் கூறிக் கொண்டு தனது பாசீசத்தை தொடர்கின்றது. தான் தொடர்ந்திருக்கும் யுத்தத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரையுமே புலி முத்திரை குத்துகின்றது. 11/9 பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் புரிவதாக கூறிக் கொள்கின்ற இவர்கள் ஏகாதிப்பத்திய பித்தலாட்டத்தை தனது பாசீச நலனுக்காக தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை பயங்காரவாதத்திற்கு எதிரான போர் என்ற மாயைக்குள் வைத்திருக்க விடாப்பிடியாக செயற்படுகின்றது.
சிறிலங்கா அரசு பாசீசத்திற்கு எதிராக சிறு குரல்களைக் கூட புலியைப் பாதுகாப்பதாக கூறுகின்றது. (இவர்களைப் போலவே)
தமிழ் புலியெதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அரசு என்னசெய்கின்றதோ அவற்றை கண்மூடித்தனமாக புலிகளுக்கு எதிரான யுத்தமாக பிரஸ்தாபிக்கின்றனர். அங்கு மக்கள் படும் துன்பங்களை இட்டு எவ்வித மனவுறுத்தல்கள் இல்லாமலே அரச பாசீசத்தை வரவேற்கின்றனர்.
தமிழ் புலியெதிர்ப்பாளர்களும் அரசைப் போலவே புலிமுத்திரை குத்துகின்றனர்.
இதே போல புலிகளின் பாசீசத்தை விமர்சித்தால் அரசகைக்கூலிகள் என புலிகளும் முத்திரை குத்துகின்றனர்.
இவ்வாறு முத்திரை குத்துபவர்கள் மக்களுக்கான தேவை இருக்கின்றது என்பதை எவரும் ஏற்கத்தயாராக இல்லை.
நாம் வலியுறுத்துவது அனைத்து விதமான பாசீச சக்திகளிடத்தில் இருந்து விடுதலையாகும்.
இங்கு புலிகளின் அதிகார வர்க்கம் அழிவது பற்றிய பிரச்சனை அல்ல. புலிகளின் அடிமட்டப் போராளிகள் அழிவது பற்றிய பிரச்சனை மற்றையதுபொதுமக்களின் அழிவைப் பாதுகாப்பது.
அடுத்ததாக தமிழ் மக்களுக்கான உரிமையை எதிரிகளிடம் சோரம் போகாது எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடம் கொடாது சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை அனைத்து தேசிய இனங்களின் ஐக்கியத்துடன் தொடர்வதாகும்.
>>> புலிகளே மக்கள் குடியிருப்பை விட்டு உங்களால் முடிந்தமுறையில் போராடுங்கள்<<<
இதில் என்ன தவறிருக்கின்றது? அரசின் தகவலின் படி 900 குறைவான போராளிகளே களத்தில் இருப்பதாக கூறுகின்றது. அப்படியாயின் மற்றைய போராளிகள் எங்கே?
அரசிற்கே தெரிந்து விட்டது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புலிகளின் தலைமைத்துவம் மற்றும் பெரும்பான்மையான போராளிகள் இல்லை என்பதை.
இதிலிருந்து தெரிவது என்ன புலிகள் தலைமை தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் அப்பகுதியில் வாழும் மக்கள் நிலைதான் என்ன? அப்படி இடைத்தங்கல் முகாமிக்கு வந்தாலும் அங்கு நடப்பது என்ன?
-நாதன்.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen