Posts mit dem Label ஜெயபாலன் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label ஜெயபாலன் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 14. März 2009

ஐயா ஜெயபாலன்...

சேனனது பேட்டியைச் சோதிலிங்கம் கண்டு, தேசம் நெற்றில் விட்டிருக்கிறார்கள்.அதற்காககான எதிர்வினையை நாதன் தொடர்ந்து ஆற்றியபோது,அங்கே-இஃது மறுக்கப்படுகிறது-சுருக்கப்படுகிறது.ஜெயபாலனது கருத்தியல் தளமானது மிகவும் விரோதமான தளத்தைக் கொண்டிருக்கிறது?
இது,ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.




எனவே, அப் பேட்டிக்கான விமர்சனத்தின் முழுமையும் இங்கே பிரசுரமாகிறது.


-உடைப்பு.







வணக்கம், ஐயா ஜெயபாலன்!

மீளவும் எழுத்தில் கைவைத்து விட்டீர்கள்.

ஏன் ,ஐயா உமக்க இந்த வேலை?

உமது புலமையை,வேறு நபர்களிடம் காட்டும்.

கீழ் எழுதியவற்றிற்கு,வினவு தளத்தின் தொடர்பை இணைத்திருந்தேன். தவிர்த்து விட்டீர்கள்.

பரீஸ் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன்,
உமது கருத்துப்பகுதியில் அதனைப் போடவில்லை.


உமது தளத்தில் இருக்கும் வாசகர்களுக்கு,
ஏன் தெரிவுச் சுதந்திரத்தை வழங்க மாட்டேன்
என்று அடம் பிடிக்கின்றீர்கள்?
ஒரு அமைப்பு உருவாக்கத்திற்கு குறுங்குழுவாதம் எவ்வாறு ,-தடையானது -ஒரு விடயமோஅதே போலதான், கருத்துக்களை மறைப்பாதாகும்!

இதற்கும், புலி கூறும் "ஏக" கருத்துக்கும் மாறுபாடு இருக்கின்றதா?
கருத்துகள் முட்டி மோதுகின்ற போதுதான் சரியான கருத்துக்களை வாசகர்கள் பெற்றுக் கொள்வார்கள். இந்த அணுகுமுறை தங்களிடம் இல்லாது ஏன்?
நீங்கள், அனுமதிக்கும் கருத்துக்கள், "வெறும் புலம்பல்கள் அல்லது அலட்டல்" கருத்துக்களை அனுமதிக்கும் நீங்கள்-ஒரு, கருத்தை முன்வைத்து ஒருவர் எழுதுகின்ற போது, முரண்பாடு இருப்பினும் வாசகனுக்கு அடைய வைப்பதுதான் மக்கள்நலன் கொண்ட ஊடக தர்மம்.

நீங்கள், உங்கள் மனவிருப்புக்கமைய கருத்துக்களை வெளியிடுகின்றீர்ள்.

இவை எமக்கு ஆச்சரியம் இல்லை. மாறாக, வாசகர்கள் இவ்வாறான ஜனநாயக மறுப்புக்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.
இன்று, நேற்றல்ல புலிகளின் ஒற்றை அமைப்பு சிந்தனை கொண்ட நாட்களில் தெடாங்கி, மாற்றுக் கருத்துக்கு மக்களை அனுமதிக்கவில்லை. தான் விரும்பிய கருத்தைக் கூற ஒரு மனிதனுக்கு முழு உரிமையும் இருக்கின்றது. இதனை ஏன் தடைசெய்கின்றீர்கள்?
உங்கள் இணைய தளம் உங்கள் தனிச்சொத்து. அதில் உங்களுக்கு சொத்துரிமை உண்டு.

ஆனால் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறும் உரிமையை தடுப்பதற்கு அல்லது. அந்த கருத்தை வெட்டிக் கொத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
ஒருவர் இந்த தளத்தில் தான் எழுத வேண்டும் என்ற வரையறையும் இல்லை.

பொது மேடைகளில் பொறுப்புணர்வுடன் எவரும் எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியும்.

முன்னர் குறிப்பிட்டபடி,

நீஙகள் விரும்பும் முதலாளித்துவ ஜனநாயக சொல்லாடல்களுக்கு அமையவே எமது கருத்தை முன்வைக்கின்றோம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் வழிவிடுங்கள்...




***********************************************

சேனனது பேட்டிக்கான எதிர்வினையின் முழுமை:

http://thesamnet.co.uk/?p=8578



வன்னி மக்களுக்கான தமிழக மக்களின் போராட்டமும் தமிழக அரசியலும். -CWI உறுப்பினர் சேனனுடன் உரையாடல் : ரி சோதிலிங்கம்அவர்களின் பேட்டிக்கு ஒரு குறிப்புதமிழ் நாட்டில் குரல் கொடுக்கின்ற சக்திகளைப் பற்றிய செய்தியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ம.க.இ.கவினரும் அவர்களின் தோழமை அமைப்புக்கள் இருக்கின்றன.

செங்கொடி (மா.லெ)
தீப்பொறி பத்திரிகை (மா.லெ வினோத் மிஸ்ரா)

மக்கள் யுத்தக்குழு

இவ்வாறான மாக்சீயக் அமைப்புகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக ம.க.இ.க ஒப்பிட்டளவில் தமிழகத்தில் செல்வாக்கை கொண்டிருக்கின்றது. ம.க.இ.க வினர் தில்லையில் தீட்சதர்களை வெற்றிகொள்வதற்கு சிவனடியார் ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கோவில் போராட்டங்களுக்கு பங்களித்தனர். இன்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

இவைகள் செய்தியாக


இவ்வாறு மா.லெ இருக்கையில் சிவபக்தரான ஆறுமுகம் ஐயாவிற்கு தெரிந்திருந்த மா.லெ அமைப்பினரை வர்க்கப் புரட்சியை விரும்பும் உறுப்பினருக்கு தெரியாததை இட்டு வேதனைப் பட வேண்டியிருக்கின்றது.
இவை தெரியாமல் விட்டதற்கு குறுங்குழுவாதமே காரணம் எனக் கொள்ள முடிகின்றது. புலிகள் எவ்வாறு குறுங்குழுவாதிகளாக சீரளிந்தார்கள் என வரலாறு நமக்குக் காட்டிள்ளது. அடுத்தபாதையை உருவாக்கிக் கொள்வதற்கு குறுங்குழுவாதமும் ஒரு காரணமாகின்றது. "புலம்பெயர் குழுக்களின் அரசியல்.

மூன்றாவது அணியும்; மூக்கணாங் கயிறும்." சிறிரங்கன் ஒரு அமைப்பு உருவாக்கம் பற்றிக் பேசுகின்ற போது. இவ்வாறான குழுங்குழுவாதம் எவ்வாறு பாதமானது என்பதை தெரியப்படுத்துவது அவசியமானதாகும்.


ம.க.இ.கவினர் தில்லை வெற்றியின் போது தாம் நடத்திய போராட்டத்திற்கு பா.மா.க, வி.சிறுத்தைகள், பெ.தி.க போன்ற நட்புச்சக்திகள் பங்குபற்றினர் என தமது அறிக்கைகள் செய்திகளில் தெரிவித்தனர். இவ்வாறான பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.ம.க.இ.க நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டங்களை பலதளங்களில் சென்று பார்க்க முடியும். உதாரணத்திற்கு http://vinavu.wordpress.com/2009/03/13/eelam29/



-நாதன்